A/L 2001 MCQ – வினா 12 - விடையும் விளக்கமும்

புகையிரதம் ஒன்று ஒரு நேர்ப்பாதை வழியே செல்கின்றது. வேறொரு புகையிரதம் அதே திசையிலும் அதே கதியிலும் முதற் புகையிரதத்திற்கு பின்னால் செல்கின்றது. முதற்புகையிரதம் மீடிறன் fo ஐ உடைய சீழ்க்கையை ஊதுகின்றது. இரண்டாம் புகையிரதத்தில் அசையாமல் இருக்கும் பயணி ஒருவருக்குக் கேட்கும் சீழ்க்கையின் தோற்ற மீடிறன் f எனின்,
  1. (1) f  > fo
  2. (2) f  < fo
  3. (3) f  = fo
  4. (4) f  = 2fo
  5. (5) f  = 1/2 fo
சரியான விடை: (3)

விளக்கம்
இரண்டு புகையிரதங்களும் ஒரே திசையில், ஒரே கதியில் ஒரு நேர்ப்பாதையில் செல்கின்றன. எனவே, இவ்விரு புகையிரதங்களுக்கும் இடையே சார்பு வேகம் இல்லை. அதாவது, இவ்விரு புகையிரதங்களுக்கும் இடையிலுள்ள தூரம் மாற்றமடையவில்லை.

எனவே, முதற் புகையிரதத்தில் ஒலிக்கப்படும் சீழ்க்கையின் மீடிறனிலேயே இரண்டாவது புகையிரதத்தில் இருப்பவர் சீழ்க்கை ஒலியைக் கேட்பார். அதாவது, சார்பு வேகம் இல்லாததால், கேட்கும் மீடிறனிலும் (தோற்ற மீடிறன்) மாற்றமிருக்காது.

எனவே, விடை (3) சரியானது.

இரண்டு புகையிரதங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்துகொண்டு வந்தால், கேட்கப்படும் ஒலியின் மீடிறன் அதிகரித்துக் காணப்படும்.

இரண்டு புகையிரதங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகரித்துச் சென்றால், கேட்கப்படும் ஒலியின் மீடிறன் குறைவாக இருக்கும்.


MCQ களுக்கு விடையளிக்கும் போது, விரைவாக விடையளிக்க வேண்டும். இவ்வினாவிற்கு மேலுள்ள குறிப்பு போதுமானது. சார்பு வேகம் இருந்தால், கேட்கும் மீடிறன் எவ்வாறு மாற்றமடையும் என்பதை, சார்பு வேகத்துடன் கூடிய வினாக்களில் விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment